மட்டக்களப்பில் பிரபல தமிழ் ஆசிரியர் கொரொனோவால் உயிரிழப்பு!
மட்டக்களப்பு வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல தமிழ் ஆசிரியரான ஆரியநந்தா கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிற்சை பெற்று வந்த நிலையில் அவர், நேற்று சிகிற்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இறுதியாக இவர் காக்தான்குடி நகரசபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார். இந்நிலையில் குறித்த ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆசிரியர் ஆரியநந்தா மறைவுக்கு பலரும் இரங்கல்களை கூறிவருகின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed